என்னால் ஒரு முழுமையான மாறுதலை உணர முடிந்தது.
நான் குறிப்பிட்டது போல, தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் ...
என்னால் என் எண்ணங்களைக் கற்பனையில் காண முடிந்தது.
என்னால் உணர முடிந்தது. முன்பு என் எண்ணங்கள் எவ்வளவு கடுமையானது என எனக்குத் தெரியவில்லை.
அவை "பாம்! பாம்! பாம்!" என மத்தளத்தின் ஒலி போல பேரோசையாக முழங்கின.
நான் குறிப்பிட்டது போல, ஒன்றன் பின் ஒன்றாக, தொடர்ந்து ...
ஒலியும் ஒளியும் போல, பின்னணி இசை போல, பின்னணிக்குரல் ஒலி போல அவைகளைக் கேட்க முடிந்தது!
அத்துடன் ...
வாவ் ...தொடர்ந்து ஒரு சிறிய திரைப்படத்தைத் அடுத்த படம் வருவது போல தொடர்ந்தது.
பற்பல சிறிய திரைப்படங்கள் போல தொடர்ந்து வந்தன.
ஆனால் இப்பொழுது தியானத்திற்கு பிறகு நிலைமையில் நல்ல முன்னேற்றம்.
முன்பு போல அதிகம் இல்லாவிட்டாலும், இப்பொழுதும் அந்த உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் முன்பு போல அதிகமாக இல்லை.
இப்பொழுது விரைவில் அந்த உணர்வை இனம் கண்கொண்டு கொள்ள முடிகிறது.
இப்பொழுது பலத்த மத்தள ஒலிபோல இல்லாமல், வலுவிழந்த நிலையில் உள்ளது.
அந்த எண்ணங்கள் இப்பொழுது இரகசியமாகப் பேசுவதைபோன்ற நிலையை அடைந்திருக்கிறது.
சிலசமயம் அதிக இரைச்சலாகவும், சிலசமயம் அவ்வாறு இல்லாமலும் இருக்கிறது.
ஆனால் முன்பு இருந்த கடுமையான சப்தம் நிறைந்த மத்தள ஒலி போல இல்லை.
உண்மையில் இந்த மாற்றம் அருமையான ஒன்று!!!