இதை நாம் இங்கு எழுத்தால் எழுத வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது, மேலும்
நான் அதை சத்தமாகச் சொல்லவில்லை
ஏனெனில் அது
விடையைச் சொல்வதாக ஆகிவிடும்.
இங்கு 63.15 என்பதை நாம் எழுத்தால் எழுத விரும்புகிறோம்
நன்று, தசமப் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எண்
எளிதானதாக உள்ளது.
நான் உண்மையில் அதை வண்ணத்தால் குறியிடுகிறேன்.
6, 3 ஆகியவற்றை நாம் பெறுகிறோம்.
அனைத்தையும் வெவ்வேறு வண்ணங்களில் நான் செய்கிறேன்.
இங்கு ஒரு தசமப்புள்ளி உள்ளது, அதன் பின்பு ஒரு 1 மற்றும் ஒரு 5 உள்ளது.
இதைச் செய்வதற்கு ஒரு பொதுவான வழி ஒன்று உள்ளது, ஆனால்
நீங்கள் இதை வார்த்தைகளாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகள் பற்றி நாம் பேசுவோம்.
ஆனால் இடது பக்கத்தில் இந்த எண்ணை எவ்வாறு எழுதுவது என்பது நமக்குத் தெரியும்.
இது மிகவும் எளிதானதாக உள்ளது.
இது அறுபத்து-மூன்று ஆகும்.
நான் அதை எழுதிக்கொள்கிறேன்.
எனவே இது அறுபத்து-மூன்று ஆகும்.
தசமப் புள்ளிக்குப் பதிலாக, மற்றும் என்பதை நாம் எழுதுவோம்.
இப்பொழுது இங்கிருந்து செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என நாம் கூற முடியும், அல்லது
பாருங்கள், இது நூறில் பதினைந்து என்று கூட நாம் சொல்ல முடியும்.
பத்தில் ஒன்று என்பது நூறில் பத்து ஆகும்.
எனவே பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பது
நூறில் பதினைந்து ஆகும்.
எனவே, இதை நான் ஒருவேளை இவ்வாறு எழுத முடியும்: அறுபத்து-மூன்று மற்றும்
நூறில் பதினைந்து.
அதைப் போலவே.
இப்பொழுது, இதைச் சொல்வது மிகவும் இயல்பானதாக தோன்றக்கூடும்,
நான் ஏன் பத்தில் ஒன்று, அதன் பின் நூறில் ஒன்று
எனச் சொல்லவில்லை?
நீங்கள் அவ்வாறு கூறலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு கூறும்போது
அதை வேறொருவர் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும்.
எனவே, அது அறுபத்து-மூன்றாக இருந்திருக்கக்கூடும் -- எனவே
நான் அதை காபி செய்து பேஸ்ட் செய்கிறேன்.
அது அறுபத்து-மூன்றாக இருக்கக்கூடும், மற்றும் அதன் பின்பு நீங்கள்
இந்த இலக்கத்துக்கு பத்தில் ஒன்று எனவும், அதற்கு வலது பக்கத்தில் நூறில் ஐந்து எனவும் எழுதுவீர்கள்.
அறுபத்து-மூன்று மற்றும் பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பதைப் புரிந்துகொள்வது
சிலருக்குக் கடினமாக இருக்கக்கூடும்.
ஆனால் நூறில் பதினைந்து என நீங்கள் கூறினால்,
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்குப் புரியும்.
உங்களுக்கு ஒரு பொதுவான பகுதி தேவைப்படுகின்றது.
100 என்பது 10 மற்றும் 100 ஆகிய இரண்டு எண்களாலும் வகுபடும், எனவே
தொகுதி மற்றும் பகுதி இரண்டையுமே 10 என்ற எண்ணால் பெருக்கவும்.
மேலே 10 எனவும் கீழே 100 எனவும் நீங்கள் பெறுகிறீர்கள்.
அதனால் தான் நாம் அறுபத்து-மூன்று மற்றும்
நூறில் பதினைந்து என்று கூறுகிறோம்.